Saturday, January 22, 2011

கோழி குழம்பு


நெய் சாதம் செய்தாச்சு அதற்க்கான பெஸ்ட் காம்பினேஷன் செய்ய வேண்டும் அல்லவா...? அதான் இந்த கோழி குழம்பு(ஆனம்).அட...இதுதான் எல்லாரும் செய்வோமே....? இது என்ன பெரிய அதிசயமா...?என்று நீங்கள் கேட்பீர்கள் எனத்தெரியுமுங்க... இது என் இல்லத்து விருந்தல்லவா... அதற்குரிய காம்பினேஷனோடு கொடுத்தால் தானே நல்லா இருக்கும்.என் கைமணம் எப்படி இருக்குன்னு கொஞ்சம் ருசிச்சுதான் சொல்லுங்களேன்...

 தேவையான பொருட்கள்
கோழி துண்டுகள்                            _    ஒரு கிலோ
வெங்காயம்                                       _    பெரியதாக ஒன்று
தக்காளி                                                _    இரண்டு
பச்சைமிளகாய்                                  _    ஒன்று
எண்ணெய்                                           _     100 மிலி
நெய்                                                        _     1 தேக்கரண்டி
 பட்டை                                                   _     1 இன்ச் அளவு 
இஞ்சி,பூண்டு விழுது                        _     2 தேக்கரண்டி         
மஞ்சள்த்தூள்                                       _     1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்                                     _     1 1/2 தேக்கரண்டி  
கரம்மசாலாத்தூள்                              _     1/2 தேக்கரண்டி
சோம்புத்தூள்                                         _     1 தேக்கரண்டி
மல்லி,புதினா தழை                            _     சிறிதளவு
கறிவேப்பிலை                                      _     ஒரு கொத்து
உருளைகிழங்கு                                    _     ஒன்று
*** அரைத்து கொள்ள ***
தேங்காய் துருவல்                                _   ஒரு கப்
முந்திரி                                                        _   5
மிளகுத்தூள்                                               _   2 தேக்கரண்டி
சீரகத்தூள்                                                   _    2 தேக்கரண்டி
மல்லித்தூள்                                               _    3 தேக்கரண்டி 


*** செய்முறை ***
கோழியை நன்கு சுத்தம் செய்து விட்டு மஞ்சள் தூள் சிறிது போட்டு நன்கு மூன்று நான்கு முறை கழுவி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம்.தக்காளி இவைகளை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
உருளையை தோல் சீவி கழுவி விட்டு பெரியதாக இருந்தால் ஆறு துண்டுகளாகவும்,சிறியதாக இருந்தால் நான்கு துண்டுகளாகவும் வெட்டி கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய்,நெய் ஊற்றி சூடு வந்ததும்,பட்டை போட்டு அரிந்த வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.

பிறகு இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
நன்கு பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி,பச்சைமிளகாயும்,அரிந்து கழுவிய மல்லி புதினா தழையையும்,கறிவேப்பிலையையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அதன் பின் தூள் வகைகளை போட்டு கிளறி விட்டு சிக்கனையும்,ஒரு ஸ்பூன் உப்பையும் போட்டு நன்கு ஒன்று சேர கிளறி மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதங்க விடவும்.( எவ்வளவு நன்றாக வதங்க விடுகிறோமோ அவ்வளவு நன்றாக குழம்பு அமையும்) 

அதற்க்குள் அரைக்க கொடுத்தவைகளை நைசாக அரைத்து கொள்ளவும்.

பிறகு வதங்கிய சிக்கனில் அரைத்தவற்றை இரண்டு டம்ளரில் கரைத்து ஊற்றி தேவையான அளவு உப்பும்,கிழங்கும்  சேர்த்து  மிகவும் தண்ணியாக இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் திட்டமாக இருக்கும்படி பார்த்து குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும் வெய்ட் போட்டு மிதமான தீயில் பத்து நிமிடம் வைத்து இறக்கவும்.

சுவையான கோழி குழம்பு ரெடி.நெய் சாதத்திற்க்கு மிகவும் நன்றாக இருக்கும்.
 (எங்கள் ஊர் ஸ்டைலில் சொல்ல வேண்டுமானால் கலரி ஆனம் போல் இருக்கும்.)
சுவைத்து விட்டு சொல்லிட்டு போங்க சரியா...?


அன்புடன், 
அப்சரா.

Friday, January 21, 2011

நெய் சாதம்

இன்று வெள்ளி கிழமையாச்சே.... ஒவ்வொரு இஸ்லாமியர்கள் வீட்டிலும் இன்று பெருநாள் போலதான் இருக்கும்.காலையில் எழுந்து வீட்டில் உள்ள அனைவரும் தலைக்கு குளித்து தடபுடலான சமையல்.... ஆண்கள் ஜும்மா சென்று வந்த பிறகு பசியோடு இருக்கும் அவர்களுக்கு நிச்சயம் நெய் சோறு, பிரியாணிதான்.எனவே வெள்ளிகிழமை என்றாலே திருநாள்தான்.
ஆனாலும் இந்த வளைகுடா நாடுகளில் இஸ்லாமியர்கள் என்று இல்லாமல் எல்லோருக்குமே இந்நாள் திருநாள்தான்.ஏனென்றால் இங்கெல்லாம் வெள்ளிகிழமைதானே அரசாங்க விடுமுறை.
 இந்நன்னாளில் எங்கள் இல்லத்தில் இன்றைய ஸ்பெஷல் (என் மகளின் ஃபேவரட்டாக்கும்...)நெய் சாதம்,கோழி குழம்பு... எங்கள் ஊர் பகுதியின் பாஷையில் சொல்ல வேண்டுமானால்... தாளிச்சோறு,கோழி ஆனம்.
பல பேருக்கு தெரிந்த ஒன்று என்றாலும் எங்கள் ஊர் விருந்தை எனது இல்லத்தில் கொடுப்பது எனக்கு பெருமையல்லாவா...?அதான் கொடுத்துள்ளேன்.


தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி                        _       2 1/2 டம்ளர்
வெங்காயம்                               _       ஒன்று 
தக்காளி   (அரிந்ததில்)           _       நான்கு துண்டுகள்
எண்ணெய்                                  _       50 மிலி
நெய்                                               _      2 தேக்கரண்டி
பட்டை                                          _      3 இன்ச்சில் இரண்டு துண்டுகள்
ஏலக்காய்                                     _      2
கிராம்பு                                          _      3
மல்லி,புதினா தழை               _     சிறிதளவு
 தயிர்                                              _      ஒரு தேக்கரண்டி
 இஞ்சி,பூண்டு அரவை           _       2 தேக்கரண்டி
 உப்பு                                                _    தேவையான அளவு

*** செய்முறை ***


வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.மல்லி,புதினா தழைகளை நன்கு நீரில் அலசி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அரிசியை மூன்று முறை கழுவி விட்டு ஊறவைக்கவும்.

 ஒரு அகலமான சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடு வந்ததும்,பட்டை,கிராம்பு,ஏலக்காய் இவைகளை போட்டு பின் நீளவாக்கில் அரிந்த வெங்காயம்,தக்காளி துண்டுகளை சேர்த்து அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

நன்கு வதங்கியதும் இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு தயிர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அதன் பின் நறுக்கி வைத்திருக்கும் மல்லி புதினா தழைகளை சேர்த்து வதக்கி ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது நீரை வடிக்கட்டி அரிசியை சேர்க்கவும்.
தண்ணீர் சுண்டும் நிலையில் இருக்கும் போது மூடியில் ஃபாயிலோ,பேப்பரோ போட்டு மூடி அடுப்பில் தம் போடும் ப்ளேட் அல்லது இரும்பு தவாவை வைத்து அதன் மேல் பாத்திரத்தை வைத்து மூடியின் மேல் வெய்ட்டான பாத்திரம் ஏதும் வைக்கவும்.அடுப்பை சிம்மில் பத்து நிமிடம் வைக்கவும்.

பிறகு மூடியை திறந்து ஒரு முரை கிளறி பார்த்தால் அடிவரை நன்கு சாதம் வெந்து உதிரியாக இருக்கும்.அடுப்பை அணைத்து விட்டு அப்படியே மூடி வைத்து விடவும்.

நன்றாக கமகமக்கும் நெய் சாதம்(தாளிச்சோறு) தயார்....
இதற்க்கு பெஸ்ட் காம்பினேஷன்  சிக்கன்(அல்லது) மட்டன் குழம்பு இல்லையா...?அது அடுத்து வந்துட்டே இருக்கு.....




அன்புடன், 
அப்சரா.

Thursday, January 20, 2011

*** சத்து அடை ***



தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி            _     முக்கால் டம்ளர்
பச்சரிசி                             _        கால் டம்ளர்
துவரம்பருப்பு                _        அரை டம்ளர்
கடலைபருப்பு                _        அரை டம்ளர்
பாசி பருப்பு                        _      2 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு            _        2 தேக்கரண்டி
வெங்காயம்                       _      பெரியதாக ஒன்று
காய்ந்த மிளகாய்            _        6
இஞ்சி                                       _        இரண்டு இன்ச் அளவு
சீரகம்                                        _        ஒரு ஸ்பூன்
எண்ணெய்                               _     சுடுவதற்க்கு
கறிவேப்பிலை                        _        இரண்டு கொத்து
சமையல் சோடா                    _        கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள்                    _        ஒரு தேக்கரண்டி
 

செய்முறை  பருப்பை வகைகளை எல்லாம் ஒன்று சேர்த்து நன்கு கழுவி அதை தாராளமாக தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
அரிசிகளையும் கழுவி விட்டு தனியே ஊற வைக்கவும்.குறைந்தது இரண்டு மணி நேரம் ஊற வேண்டும்.

ஊறிய பின்பு மிக்ஸியில் அரிசியையும்,காய்ந்த மிளகாய்,சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி முதலில் அரைக்க வேண்டும்.
ஓரளவு அரந்ததும்,பருப்புவகைகளையும்,இஞ்சி துண்டையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றிவிட்டு பின்பு கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். 

பின்பு பொடியாக அரிந்த வெங்காயம், பெருங்காயத்தூள்,தேவையான அளவு உப்பும்,சமையல் சோடாவும் சேர்த்து விட்டு மூன்று முறை லேசாக மிக்ஸியை சுற்றி விட்டு ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும்
 
மூடி இரண்டு மணி நேரம் கழித்து பொடியாக அரிந்த கறிவேப்பிலையை சேர்த்து நன்கு கலந்து விட்டு வைக்கவும்.



தோசைகல்லை அடுப்பில் வைத்து சூடு வந்ததும்,ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி மெல்லியதாக தடவி சுற்றிலும் ஒரு ஸ்பூன் எண்ணெயை விட்டு,அடி நன்கு சிவந்ததும் திருப்பி போட்டு விட்டு சிறிது எண்ணெயை ஊற்றி  நன்கு சிவந்ததும் எடுக்கவும்.
 
மிகவும் சுவையான சத்துள்ள அடை தயார்.இதற்க்கு தேங்காய் சட்னி,சாம்பார் தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.இதையே குழந்தைகளுக்கு கொஞ்சம் மொத்தமாக சிறியதாக ஊற்றி மூன்று கலரான குடைமிளகாயை பொடியாக அரிந்து தூவி,சீஸையும் தூவி அடி மொறுவலாக வரும் வரை அடுப்பை சிம்மிலேயே வைத்து பிறகு எடுத்து கெட்ச்சப்புடன் கொடுக்கலாம்.சில குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
பருப்புகள் அதிகம் சேர்ப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் சத்தானது.ஆனால் அதே சில பெரியவர்களுக்கு வயிற்று கோளாறு ஏற்படாமல் இருக்கத்தான் சீரகம்,இஞ்சி,பெருங்காயத்தூள் இவையெல்லாம் சேர்ப்பது. எனவே பெரியவர்கள் பயப்படாமல் சாப்பிடலாம்.




அன்புடன், 
அப்சரா.

Wednesday, January 19, 2011

**** சிம்பிள் தக்காளி ரசம் ****

                                       


 தேவையான பொருட்கள்

நன்கு பழுத்த தக்காளி                 _     4
 மஞ்சள்த்தூள்                                   _     1 தேக்கரண்டி
 மல்லித்தழை                                   _     சிறிதளவு
 *** பொடித்து கொள்ள ***
 மிளகு                            _    ஒரு ஸ்பூன்
சீரகம்                              _     அரை ஸ்பூன் 
 காய்ந்த மிளகாய்      _     3
 பூண்டு                            _     5 பல்

 *** தாளிக்க ***
எண்ணெய்                    _    மூன்று தேக்கரண்டி
கடுகு                                _    ஒரு ஸ்பூன்  
கறிவேப்பிலை            _     ஒரு கொத்து
 பெருங்காயம்              _     சிறிதளவு

 *** செய்முறை ***
 தக்காளியை நன்கு கழுவி விட்டு,இரண்டாக அரிந்து நன்கு தாராளமாக தண்ணீர் சேர்த்து மஞ்சள்த்தூளும் சேர்த்து வேகவிடவும்.

 வெந்ததும் ஆறவிட்டு நன்கு இரண்டு டம்ளர் தண்ணீரை ஊற்றி இரண்டு மூன்று முறை என கரைத்து சக்கையை ஓரளவிற்க்கு நீக்கி விடவும்.(புளிப்பு தன்மை இருக்கும் அளவிற்க்கு பார்த்து கொள்ள வேண்டும்.)
 அதன் பின் பொடிக்க கொடுத்தவைகளை நன்கு நசுக்கி அதில் சேர்க்கவும்.தேவையான உப்பும் போட்டு கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தாளிக்க கொடுத்தவைகளை கொண்டு தாளித்து ரச கரைசலை ஊற்றி மல்லிதழையை நறுக்கி சேர்த்து இரண்டு முன்று கொதி கொதிக்க விட்டு இறக்கவும்.சுவையான சுலபமான ரசம் தயார்.








அன்புடன், 
அப்சரா.

*** மேகி நூடுல்ஸ் ***

                                       



தேவையான பொருட்கள்

 மேகி பாக்கெட் (கறி ஃபிளேவர்)    _   2 பாக்கெட்
வெங்காயம்                                            _   பெரியதாக ஒன்று
தக்காளி                                                    _    ஒன்று
பீன்ஸ்                                                        _      மூன்று
 கேரட்                                                         _      பாதியளவு
குடைமிளகாய்                                       _     கால் பகுதி
 பச்சைபட்டாணி                                    _    இரண்டு ஸ்பூன்
பச்சைமிளகாய்                                       _    ஒன்று
இஞ்சி,பூண்டு அரவை                          _    1/2 ஸ்பூன்
மல்லி தழை                                             _     சிறிதளவு
எண்ணெய்                                                 _     மூன்று தேக்கரண்டி
 முட்டை(விரும்பினால்)                    _    ஒன்று

 *** செய்முறை ***

ஒரு வானலியில் நூடுல்ஸ் வேகும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பிக்கும் போது வெறும் நூடுல்ஸை இரண்டாக உடைத்து போடவும்.

காய்களை எல்லாம் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
இரண்டு கொதி கொதித்ததுமே.... வடிகட்டி பச்சை தண்ணீரை நன்கு அலசலாக ஊற்றி குலுக்கி விட்டு வைக்கவும்.
வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,நறுக்கிய வெங்காயம் தக்காளியை போட்டு வதக்கவும்.இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி ,உடனே காய்களையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

நன்கு வதங்கியதும்,மேகியில் உள்ள மசாலாக்களை சேர்த்து குறைந்த தீயில் வைத்து சிறிது நேரம் வதக்கவும்.பின்பு விரும்பினால் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு ஒன்று சேர கிளறி விடவும்.

முட்டை வெந்ததும் நூடுல்ஸையும்,பொடியாக அரிந்த மல்லிதழையை சேர்த்து நன்கு மசாலா எல்லாம் நூடுல்ஸில் ஒன்று சேர பிரட்டிவிட்டு சூடு ஏறியதும் அடுப்பிலிருந்து இறக்கவும். 
குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் டேஸ்ட்டில் இருக்கும்.


அன்புடன்,
அப்சரா.

*** இட்லி,தேங்காய் சட்னி **

நாம் என்ன தான் விதம் விதமாக நாண்,பரோட்டா,பாவ் பாஜி,குப்பூஸ்ன்னு சாப்பிட்டாலும் நம்ம தமிழ்நாட்டு இட்லிக்கு ஈடாக முடியுமா...?வாரத்தில் ஒரு நாளாவது சாப்பிடாவிட்டால் தேடி வந்துவிடும்.அட சிலர் விரும்பி சாப்பிடவில்லையென்றாலும் கூட  வெளியில் எங்கும் போய்விட்டு வரும் நமக்கு இந்த இட்லி மாவு இருந்தால் ஒரு இட்லியோ,தோசையாகவோ செய்து பத்து நிமிடத்தில் சாப்பிட்டு விடலாமே.....எனவே தான் இந்த இட்லி சட்னி கொண்டு டிபன் பகுதியை தொடங்கலாமுன்னு வந்தேன்.எல்லாரும் அரைத்த மாவையே அரைக்கிறாளேன்னு யாரும் திட்டாதீங்க... இது எங்க வீட்டு இட்லின்னு செய்து தருகின்றேன்.சரியா.... இப்ப செய்முறைக்கு போவோம்.


*** இட்லி மாவுக்கு ***
தேவையான பொருட்கள்
இட்லி குண்டு அரிசி(அல்லது}  _      2 1/2 டம்ளர்
புழுங்கல் அரிசி
 பச்சரிசி                                                _      1/2 டம்ளர்
உளுந்து                                                 _      ஒரு டம்ளர் (குமித்தாற்போல்)
சாதம்                                                      _      இரண்டு கைப்பிடி

*** தேங்காய் சட்னிக்கு ***
தேங்காய் துருவல்                            _     ஒரு கப்
பொட்டுகடலை                                   _     3 தேக்கரண்டி  
பச்சைமிளகாய்                                    _     3 
சின்னவெங்காயம்                              _     4 
பூண்டு                                                       _     2 பல்
கடுகு                                                          _    ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய்                                   _    2
எண்ணெய்                                                _    3 ஸ்பூன் 
கறிவேப்பிலை                                        _    ஒரு கொத்து

*** செய்முறை ***
இட்லிக்கு அரிசி உளுந்து இவைகளை நன்கு களைந்து விட்டு தனிதனியே ஐந்து மணிநேரம்ஊறவைக்கவும்.  ஊறவைக்கும் போதே ஒரு கிண்ணம் நிறைய தண்ணியையும் ஃபிரிட்ஜில் வைத்து விடவும்.
பிறகு முதலில் உளுந்தை நைசாக அரைத்து எடுத்து விட்டு ,பின்பு சாதத்தையும்போட்டு பிறகு அரிசியையும் சேர்த்து அரைத்து  தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைத்து புளிக்க விடவும்.

சட்னிக்கு தேங்காய்துருவல்  ,பொட்டுகடலை,வெங்காயம் ,பூண்டு,பச்சைமிளகாய்,தேவையான அளவு உப்பும் சேர்த்து அரைக்கவும்.

ஃபிரிஜ்ஜில் வைத்த தேங்காய் எடுத்து அரைத்தால் சுடுதண்ணீர் விட்டு அரைக்கவும்.பின்பு தேவையான தண்ணீர் சேர்த்து கிண்ணத்தில் கலந்து கொண்டு ஒரு சிறிய தாளிக்கு கைப்பிடியில் எண்ணெய் ஊற்றி கடுகு ,காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

இட்லியை ஊற்றி வேக வைத்து எடுத்த சுட சுட இட்லியுடன்,சட்னியை சேர்த்து பரிமாறவும்.


அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out