Saturday, January 25, 2014

சாக்லெட் லார்வா கேக்

டிசம்பர் பள்ளி விடுமுறையில் குழந்தைகள் வீட்டில் முழுநேரமும் இருந்ததால் ஏதாவது கொறிப்பதற்கு கேட்டு கொண்டிருப்பார்கள்.எனவே ஏதேனும் கேக்,டஸர்ட் ,நம்ம ஊர் திண்பண்டம் என செய்து கொடுத்து கொண்டிருந்தேன்.இதில் ரொம்ப நாளாக அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தது தான் சாக்லெட் லாவா கேக்.
இது தான் முதல் தடவை இந்த கேக்கை செய்வது.ரொம்ப நன்றாகவே வந்தது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள்.சூப்பர் என சர்டிஃபிகெட்டும் கொடுத்து விட்டார்கள்.இதை விட பெரிய சந்தோஷம் வேறு என்ன இருக்கின்றது.இந்த சந்தோஷத்தோடு இதன் செய்முறையையும் பார்த்துவிடலாம்.
                                       
                                                சாக்லெட் லார்வா கேக்

தேவையான பொருட்கள்
**************************
குக்கிங் சாக்லெட் சிப்ஸ்    -  ஒரு கப்
பேக்கிங் சாக்லெட்      -    1
மைதா மாவு                 -  அரை கப்
கண்டன்ஸ்ட் மில்க்  -  அரை டின்
பேக்கிங் பவுடர்           -   1/2  தேக்கரண்டி
பட்டர்                              -  4  மேசைக்கரண்டி
வெனிலா எஸன்ஸ்(விருப்பப்பட்டால்)  -  1 தேக்கரண்டி

செய்முறை
************

முதலில் ஒரு சில்வர் பாத்திரத்தில் குக்கிங் சாக்லெட் மற்றும் பட்டரை போட்டு டபுள் பாய்லர் மெத்தடில் உருக வைக்க வேண்டும்.அதாவது இந்த சாக்லெட் உள்ள பாத்திரத்தை மேலே வைக்கும் படியான வாய் கொஞ்சம் குறுகலான  பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் கால் பகுதி தண்ணீர் ஊற்றி சூடு படுத்திவிட்டு மிதமான தீயில் வைத்து விட்டு அதன் மேல் சாக்லெட் உள்ள பாத்திரத்தை வைத்து சாக்லெட்டை உருக செய்ய வேண்டும்.
(புகைப்படத்தில் உள்ளபடி)
இதற்கிடையில்,நடுத்தர அளவிலான பேக்கிங் கண்ணாடி பாத்திரம் அல்லது நான்ஸ்டிக் பாத்திரத்தை எடுத்து கொண்டு அதில் பட்டரை உள்ளே நன்கு தடவி விட்டு சிறிது மைதா தூவி எல்லா இடத்திலும் படுமாறு தட்டி விட்டு எல்லா இடத்திலும் மாவு ஒட்டி கொண்டதும் மீதி மாவை கீழே தட்டி விடவும்.
இப்போது  அவனையும் 180 டிகிரி அளவில் முற்சூடு செய்யவும்.
சாக்லெட்டும்,பட்டரும் உருகியதும் நன்கு கலக்கி விட வேண்டும்.ஒன்று சேர கலக்கி கொண்டே கீழே இறக்கி வைத்துக் கொண்டு அதில் கண்டன்ஸ்ட் மில்க்கை ஊற்றி கலந்து விடவும்.


பிறகு அதிலேயே பேக்கிங் பவுடர் மற்றும் மைதா மாவை சேர்த்து நன்கு ஒன்று சேர அந்த சூட்டிலேயே கலக்கி விட வேண்டும்.கெட்டியாகி விடும்
 அதன் பிறகு முற்சூடு முடிந்ததும்,பேக்கிங் பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள மாவை நன்கு கலந்த வண்ணம் ஊற்றி விட்டு அதன் நடுவே பேக்கிங் சாக்லெட்டில் கட்டம் கட்டமாக இருக்கும் அல்லவா அதில் ஒரு விரல் அளவு உடைத்த துண்டுகளில்  இரண்டு துண்டுகளை  நடுவில் மெதுவாக நிற்க்கும் படி வைக்கவும்.
அதை அவனில் வைத்து 18 நிமிடம் செட் செய்து பேக் செய்யவும்.
நேரம் முடிந்ததும் வெளியில் எடுத்து பத்து நிமிடம் வைத்து விட்டு ஒரு ட்ரேயில் தலை கீழாக வைத்து மெதுவாக கவிழ்த்தால் அழகாக வந்து விடும்.அதன் நடுவே லேசாக வெட்டி பார்த்தோமேயானால் சாக்லெட் மெல்ட்டாகிய படி இருக்கும்.சுற்றி கேக் வெந்து இருக்கும்.சாப்பிட ம்ம்ம்ம்... மிகவும் சுவையாக இருக்கும்.குழந்தைகள் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.இளஞ்சூடாகவே சாப்பிட நன்றாக இருக்கும்.ஆறியும் சாப்பிடலாம்.




இதில் இன்னும் சில குறிப்புகள்:-)))
*********************************
இதில் அதிகம் சாக்லேட் லார்வா (நடுவில் உருகியிருப்பது)வேண்டுமெனில் இன்னும் ஒரு துண்டு சேர்த்து கொள்ளலாம்.
வெனிலா எஸன்ஸ் நான் ஊற்றவில்லை வெறும் சாக்லெட் சுவையுடனே இருக்கும்படி செய்தேன்.உங்களுக்கு விருப்பமெனில் வெனிலா எஸன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
பேக் செய்யும் நேரம் ஓவனுக்கு ஏற்றார்போல் கொஞ்சம் வித்தியாசப்படலாம்.
எங்கள் வீட்டில் இருப்பது கன்வெக்‌ஷன் அவன்.எனவே எனக்கு இந்த டைம் சரியாக இருந்தது.மேலும் இதற்கு மேல் நேரம் தேவைபடாது 
என்றே நினைக்கிறேன்.20 நிமிடங்களுக்குள்ளாகவே ரெடியாக கூடியதுதான் இந்த கேக்.
இந்த அளவில் உள்ளதை இன்னும் சிறிய பவுலாக எடுத்துக் கொண்டு இரண்டு கேக்காகவும் ஒரே நேரத்தில் பேக் செய்யலாம்.

Monday, January 20, 2014

தேங்காய் பால் சாதம்

இது நம் தமிழர் சமையலுக்கான குறிப்பு...
அதுவும் இல்லாமல் இந்த குறிப்பை நீண்ட நாளாக எனது வலைப்பூ இல்லத்தில் போட இருந்த சமையல் குறிப்பாகும்.
ஏனெனில் எங்கள் வீட்டின் ஸ்பெஷல் உணவு வகைகளில் இந்த தேங்காய்பால் சாதம்,மீன் காம்பினேஷன் அனைவரின் விருப்ப சாப்பாடாகும்.இனி இதன் செய்முறையை பார்க்கலாம்.



                               தேங்காய்பால் சாதம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி (அ) புழுங்கல் அரிசி - 4 டம்ளர்
தேங்காய்                                       - 2
பெரிய வெங்காயம்                    -  1
பூண்டு (  முழுதாக )                    -   1
பட்டை                                              -  2 இன்ச் அளவில் 2
ஏலக்காய்                                         -  3
வெந்தயம்                                        -  1 மேசைக்கரண்டி
நெய்                                                    -  3 மேசைக்கரண்டி
புதினா மல்லி தழை                     -  ஒரு கைப்பிடி
கருவேப்பிலை                               -  ஒரு கொத்து

செய்முறை

அரிசியை நன்கு கழுவி விட்டு தண்ணீர் வடித்து விட்டு வைக்கவும்.
தேங்காயை உடைத்து அதில் நன்கு தண்ணீர் ஊற்றி இரண்டு மூன்று முறை அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.(முதல் பால் இரண்டாம் பால் மூன்றாம் பால் என...)
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.பூண்டை உரித்து விட்டு அம்மியிலோ,குத்துக்கல்லிலோ நசுக்கி வைத்துக் கொள்ளவும்.நைசாக அரைக்க கூடாது.

இப்போது சாதம் செய்யும் பாத்திரத்திலோ,அல்லது ஒன்றரைபடி குக்கரிலோ மூன்று முறையாக எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை எட்டு டம்ளராக அளந்து ஊற்றவும்.தேங்காய் பால் முடிந்து போனால் மீதிய அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.(ஒன்றுக்கு இரண்டு என கணக்கில் அளந்து வைக்க வேண்டும்.) 
அதில் தேவையான அளவு உப்பு,நசுக்கிய பூண்டு,அரிந்த வெங்காயம்,அரிசியை தவிர்த்து மற்றுமுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து கலக்கி அடுப்பில் வைக்கவும்.
கொதிக்க ஆரம்பிக்க நுரை பொங்க வரும் அந்த சமையத்தில் கழுவி வைத்திருக்கும் அரிசியை போட்டு நன்கு கிளறவும்.
சட்டியில் தம் போடுவதென்றால் தண்ணீர் சுண்டும் நிலையில் தம் போடும் தவாவை அடுப்பில் வைத்து அதன் மேல் இந்த சட்டியை வைத்து தவா சூடேறியது,அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு,மூடியில் அலுமினிய ஃபாயில் போட்டு மூடி மேலே ஏதேனும் வெயிட் வைத்து 15 நிமிடம் விடவும்.
அதன் பிறகு திறந்து பார்த்து கிளறிவிட்டு பார்த்தால் சாதம் வெந்திருக்கும்.உதிரியாகவும் இருக்கும்.அப்போது அடுப்பை அணைத்து விடவும்.
இதே குக்கரில் வைத்தோமேயானால்,இதே போல் அரிசியை போட்டு கிளறிய பின் நன்கு தள தளவென்று கொதிக்கும் போது குக்கரை மூடி விடவேண்டும்.
நன்கு ஸ்டீம் வரும் போது வெயிட் போட்டு அடுப்பை குறைந்த தீயில் வைத்து 8 நிமிடம் கழித்து இறக்கவும்.ஸ்டீம் விட்டதும்,மூடியை திறந்து ஒரு முறை அடியிலிருந்து கிளறிவிட்டு வைத்தோமேயானால் சாதம் உதிரியாக இருக்கும்.


இத்தோடு மீன்குழம்பும்,மீன் பொறித்தும்,ஒரு கீரை அல்லது ஏதேனும் காய் கூட்டோ வைத்து அப்பளமும் சேர்த்து சாப்பிட்டோமேயானால் சாப்பாடு செல்வதே தெரியாது.அவ்வளவு ருசியாக இருக்கும்.
கோழி,கறி குழம்பும் நன்றாகவே இருக்கும்.சைவம் எனில் பாசி பருப்பு சாம்பார் புளி அல்லது புதினா துவையல் காம்பினேஷன் அப்படியே அள்ளும்.


Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out